யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்ததாவது, வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வளிமண்டல நிலைமை அவரது அறிவிப்பில் மேலும் கூறியதாவது, ஜனவரி 22ஆம் தேதி இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளிமண்டலத்தில் நிலைத்தன்மையற்ற சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மற்ற மாகாணங்கள் இதே காலப்பகுதியில் மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மழை ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது.
விவசாயிகளுக்கான அறிவுரை
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை செய்பவர்கள், அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர விடுபவர்கள் இந்த மழை நாட்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
வெங்காயம் மற்றும் காய்கறி பயிரிடுபவர்களும் இதனை மனதில் கொள்ளுவது அவசியம்.

குளிரான நிலைமை தற்போது நிலவும் குளிரான காலநிலை, அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

