சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக,இலங்கை சந்தையில் இன்று [21]தங்கத்தின் விலை 2வது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளது.
அகில இலங்கை நகையகசங்கங்களின் தரவுகளின் படி இன்று[21],முற்பகல் 24 காரட் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 10000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது பவுன் ஒன்றுக்கு 5000 ரூபாயால் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி , 24 காரட் தங்கம் பவுன் ஒன்றுக்கு 385,000 ரூபாயாகவும் விற்பனைசெய்யப்படுகிறது 22 காரட் தங்கம் ஒன்று 356,125 ரூபாயாகவும் விற்பனைசெய்யப்படுகிறது.இதன்படி,24 காரட் தங்கம் 48,125 ரூபாயாகவும் ,22 காரட் தங்கத்தின் விலை 44,125ரூபாயாகவும் விற்கப்படுகிறது
இன்று ஒரேநாளில் மாத்திரம் பவுன் ஒன்றுக்கு 15,000 ருபாய் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில் பவுன் ஒன்று , ஒரு அவுன்ஸ் 4800 அமெரிக்க டொலர்களை தாண்டியதே இந்த உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணமாகும்.
