சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவான, எஸ் டி எப் எனப்படும் சிரியா ஜனநாயகப்படைக்கு வழங்கிவந்த ஆதரவை நிறுத்துவதாக ,அமெரிக்கா அறிவித்துள்ளது .
மேற்காசியநாடானசிரியாவில்,குர்து
பழங்குடியினதவரின் ஆயுதக்குழுவான எஸ் டி எப்,
ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியதால் இதனால் எஸ் டி எப்,படைக்கு அமெரிக்கா ராணுவம் ஆதரவு வழங்கியது
கடந்த 2024இல் அதிபர் பசால் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்த பின் அகமதுஅல் ஷரா அதிபரானார் இவருக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருந்தது
எஸ் டி எப்,கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் சிரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது இதற்கிடையே நடந்த அமைதி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.ஆயுதக்குழுவை ,ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இருப்பினும் ஒப்பந்தத்தை மீறி மோதல் நடப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில்.எஸ் டி எப், குழுவுக்கான ஆதரவை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
