யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளில் வானில் பட்டங்கள் வானில்பறக்க விடுவதனை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் ,விமானங்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள காங்கேசன்துறை,மாவிட்டபுரம்,வருத்தலை விலான் ,பலாலி ,மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன்,அது தொடர்பான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கியில் மூலம் அறிவிக்கப்படுகிறது .
கடந்த வரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்ப்பட்ட வேளை பட்டத்தினால் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் ,அதனால் பாரிய விபத்து ஏற்பட இருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிரங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
