கண்டி, ஹதரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த டி. பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவி, கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பியபோது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியான பிரபாத் மேகசூரிய என்பவர் ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் கலகெதர நீதவான் நுவான் குணசேகர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
