இந்தியாவில் மேகாலயா மாநிலம் ,கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
தாங்ஸ்கு பகுதியில் இன்று ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோதமாக இயங்கியதாக சந்தேகிக்கப்படும் இந்த சுரங்கத்தில், வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மேகாலயாவில் இவ்வகை ‘தேனீ பொறி’ சுரங்கங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
