ஊவா மாகாணத்திலும் மாத்தளை , நுவரெலியா ,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நாளை [07.01.2026] மழை பெய்யக்கூடும் எனா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது திணைக்களம் இன்று [06.02.2026] வெளியிட்ட தகவலில் வடக்கு ,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திழும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வடக்கு,வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை , திருகோணமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியலத்துக்கு 30-40 km வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் பொது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏட்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கே பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்குகிறோம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
