அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் இலங்கையின் முதலாவது திரைப்படமாக வெளிவந்த புஷ்பக 27 திரைப்படமானது தற்போது வடமராட்சி மண்ணில் பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில் எதிர்வரும் 02.11.2025ம் திகதி மதியம் 02.00 மணியளவில் திரையிடப்படவுள்ளது.
இந்த புஷ்பக 27 விண்வெளி சார்ந்த திரைபடத்தினை இயக்கியிருக்கின்றார் ஈழத்து சினிமாவின் முன்னணி இயக்குனர் காரை சிவனேசன் மேலும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜெர்ரி ஸ்டாலின் , இந்தத்திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை சத்யா மெண்டிஸ் அவர்கள் எழுதியுள்ளார்.
ஈழத்து சினிமாவின் தரத்தை உயர்த்தும் முகமாக முற்று முழுதாக நவீன சினிமாக்களின் பாணியில் புதிய முயற்சியாக பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த திரைப்படத்தினை மிகவும் சிறப்பாக தயாரித்துள்ளார்கள் நம்நாட்டின் ககலைஞர்கள். இந்தத் திரைப்படமானது கடந்த காலங்களில் பல இடங்களில் திரையிடப்பட்டு வந்தததோடு தற்போது கலை ஆர்வம் மிக்கவரும் யாழ் பல்கலைக்கழக மாணவருமான அம்சன் அவர்களின் முயற்சியில் இப்போது வடமராட்சி மண்ணின் பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில் எதிர்வரும் 02.11.2025ம் திகதி மதியம் 02.00 மணியளவில் திரையிடப்படவுள்ளது எனவே இந்தத் திரைப்படத்தினை அனைவரும் சென்று பார்வையிட்டு நம்நாட்டுக் கலைஞர்களின் முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பாங்காற்றுவோம் அதனூடாகவே ஈழத்து சினிமா உலக பேசுபொருளாகும்.
