இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு உதவிகளை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகளால் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் கடட்டுமான நடவடிக்கைகளுக்கு தேவையான பங்களிப்பை வழங்க ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு முன்வந்துள்ளது.
Storms across Thailand, Indonesia, Malaysia, and Sri Lanka have devastated communities. At Apple, we’re thinking of everyone affected, and will be donating to relief and building efforts on the ground.
— Tim Cook (@tim_cook) December 2, 2025
