இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது .இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 வது மற்றும் கடைசி ஒருள் போட்டிகள் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது .

முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்ச்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார் . இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது,ரசிகர் ஒருவர் பாதுகாப்பது தடைகளினை தாண்டி மைதானத்துக்குள் ஓடி வந்து விராட் கோலி கால்களை தொட்டுவணங்கினார் .உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீது
மைதானத்தை விட்டு வெளியேற்றினர்
இந்நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள் .எந்த ஸ்டேஷன் என்று என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை .ஆனால் விராட் கோலி சார் அவர்களை அழைத்து
பேசியவுடன் ,நான் விடுவிக்க பட்டேன் “என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
