இந்த ஆண்டின் 3ம் தவணை முடிவினுள் பாடசாலைகளுக்கு எந்த விதத்திலும் பரீட்சை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை இடம்பெறாது என்று நாலக கழுவெவ தெரிவித்துள்ளார். மற்றும் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் இருக்குமாயின் அது தொடர்பாக பாடசாலையில் கலந்துரையாட முடியுமே தவிர, மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் பரீட்சைகள் இல்லை என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே சில மாகாணங்களில் 3ம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும்,அந்த வினாத்தாள்களை கலந்துரையாட முடியுமே தவிர , பரீட்சை நடாத்த முடியது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 3ம் தவணைக்குரிய தவனைப்பரீட்சைகள் டிசம்பர் 8- டிசம்பர்19வரை இடம்பெற இருந்த வேளை அத் திகதியில் தற்போது நடத்த முடியாத நிலை காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
