இலங்கையின் புனரமைப்பு பணிக்காக இந்திய அரசு 450 மில்லியன் டொலர் பெறுமதியான விசேட நிதி உதவிஇணை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று அறிவித்துள்ளார்.
இன்றுகாலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவை சந்தித்த அவர் ,
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்
டித்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய சேதங்கள் குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டார் .
இந்தியா உறுதியளித்துள்ள இந்த 450 மில்லியன் டொலர் நிதி உதவியை எவ்வளவு விரைவாகவும் வினைத்திறனாகவும் இலங்கைக்கு வழங்க முடியும் என்பது குறித்து அலோசிக்கப்பட்டது.
இந்த நிதியுதவி இரண்டு முக்கிய பிரிவுகளாக வழங்கப்படவுள்ளது.
சலுகைக்காடனாக 350 மில்லியன் அமெரிக்க டொலரும் நன்கொடையாக 100 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்படவுள்ளது.

இந்த புனரமைப்பு பொதியானது சூறாவளியினால் மிக மோசமாக பாதிப்படைந்த வீதிகள், தொடரூந்து பாதைகள் மற்றும் பாலங்கள் மீளமைத்தல் மற்றும்பழயநிலைக்கு கொண்டுவருதல்.முழுமையாக அழிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் .
சுகாதாரம் மற்றும் கல்வித்துறை சார்ந்த கட்டடங்களை புனரமைத்தல் மற்றும் பாதிக்கப்படட விவசாயத்துறையை மீண்டும் கட்டியெழுப்புதல்.எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த பேரிடர் மேலான்மை மற்றும் தயார் நிலை திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றை உள்ளடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் அண்டை நாடு என்ற வகையில் இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையிலும் இந்திய துணை நிற்கும் என உறுதியளித்துள்ளது
