குறித்த சடலமானது நேற்று [23.12.2025] மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் -ஆறாம் குறுக்குத்தெரு வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் வசித்து வந்த வினோதா ஜெகநாதன் [வயது 71] என்ற பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெளியில் சென்ற பணிப்பெண் வீடுத்திரும்பியபோது இவரை காணவில்லை என தேடியுள்ளார் . இதன் போது அவர் கிணற்றிலிருந்து சடலமாக கிடப்பதை கண்டு அயலவர்களுக்கு தெரியப்படுத்திய போது ,
மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு தலைமையக காவல்துறை போலீசாரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் ,சம்பவ இடத்திர்க்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன்.சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பிணிப்புரை விடுத்தார்
