குருநாகல் -லுணுவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை[26] இடம்பெற்றுள்ளது. அதிக வேகத்துடன் சென்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாடை இழந்து வீதியோரத்தில் நின்ற தொலைபேசி கம்பத்துடன் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது இவ் விபத்தில் உயிரிழந்த மாணவன் 18 வயதுடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
