க.பொ.த உயர்தர பரீட்சையில் நடாத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில்
நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,சீரற்றவானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் எதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அதற்கமைய,பாடசாலை செல்லும் சுமார் ஒரு லச்சம் மாணவர்கள் இந்த அனர்த்தத்தில் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் ,அணர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 16ம் திகதி திறப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரதேசத்தில் , எந்தப் படசாலைகள் திறக்கப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை [8] அல்லது செவ்வாய்க்கிழமை [9] வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.
இப்படசாலைகளை திறப்பதுடன் , க.பொ.த உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது எனவும் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளர்
