டித்வா புயலின் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற நாட்டின் அசௌகரிய சூழ்நிலை கருதி பிற்போடப்பட்ட 2025ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2025ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீடட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
