மஹரகம-தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிடிவி கமரா பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவத்தை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் அந்நிலையத்தின் உரிமையளர் தலங்கம போலீசாரால் திங்கட்கிழமை[8] கைது செய்யப்படுள்ளார்.
தலங்கம போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளபட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்
மற்றும் அவரிடமிருந்து பெறப்படட கையடக்க தொலைபேசியில் மேட்கொள்ளப்பட்ட சோதனையில் ,அணியல் அறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் காணொளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்நபரின் கையடக்க தொலைபேசியில் உள்ள காணொளியில் பெண்கள்,சிறுமிகள்,மற்றும் யவதிகள் உள்ளிட்ட பலர் காணப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தாரா அல்லது வேறு எவருக்கேனும் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் போலீசார் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
