வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு சுகாதார
அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவி வருவதாக எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது .
இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும் ,பல மாவட்டங்களில் இப் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கார்னியல் அறுவை சிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது .இது பல, பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆரம்ப அறிகுறிகளை கவனித்துப் பரவுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்காக விழிப்புணர்வு திட்டங்களை தொடங்கியுள்ளனர்
மேலும் கண் சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
கண்- கை தொடர்பு,.இருமல் மூலமும் பரவுதல் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் மூலம் இந்த நோய் பரவுவதாக அறியப்பட்டுள்ளது
அடிக்கடி கை கழுவுதல்.கண்களை தேய்ப்பதை தவிர்த்தல் தனிப்படட பொருட்களை பகிர்வதை தவிர்த்தல் மூலமும் இந்த நோய்ப்பரவலை தவிர்த்துக்கொள்ள முடியும்.
மேலும் மோசடையும் அறிகுறிகள் தென்படின் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு வலியுறுத்தப்படுகிறது
