யாழ்.நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார் .
இந்தச்சம்பவம் நெடுந்தீவு மாவலி துறை முகத்தில் இன்று [10.12.2025] புதன்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்,நெடுந்தீவு கிக்கு,15ம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் ‘நெடுந்தாரகை’ படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு காட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் விழுந்த நிலையில் வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நெடுந்தீவு கடட்படை சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டு குறித்த நபரை சடலமக மீட்டுள்ளனர்.
மற்றும் சம்பவம் தொடர்பாக கட்டானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
