நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ், போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பிணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இன்று காலை [23] ,8.00மணி முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்க்கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்ற தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப்பணிப்புறக்கணிப்பு இடம் பெற்று வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை அதனால் தோலை தூரங்களிலிருந்துவருகை தந்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து திரும்பிசெல்லும் நிலை நேரிட்டது.
