ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே , கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீலை 8ம் திகதி நாரா நகர ரயில் நிலையம் முன்பாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் நின்ற நபர் துப்பாக்கியால் சுட்டார்
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஷின்சோஅபே,இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.அவரை கொலை செய்த டெட்ஸு யஹாமி [வயது 45] என்றார் நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் ஜப்பானில் துப்பாக்கி தொடர்பான சட்டங்கள் கடுமையாக அமுலில் இருக்கின்ற போதிலும் பிரதமரை இவ்வாறு சுட்டுக்கொன்ற சம்பவம் நடையே உலுக்கியது.
இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு ஜப்பானில் முக்கிய அரச பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது இதற்கிடையில் ஷின்சோ அபேவை கொலை செய்த யமகாமி மீதான விசாரணை நாரா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ஜப்பானில் உள்ள யூனிபிகேஷன் தேவாலயத்திற்கும், ஷினஸோ அபேவுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவதற்கே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக யமகாமி கோர்ட்டில் தெரிவித்துள்ளார் அதெ சமயம் ஷின்ஸோ அபேயின் மனைவி அகீ அபேவிடம் மன்னிப்பு கேட்டுக்கொல்வதாகவும் யமகாமி தெரிவித்திருந்தார் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் , ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை வித்தித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
