மானிப்பாய் கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடானது நேற்று மாலை [19]அன்று தீப்பற்றி எரிந்தது
இதனடிப்படையில் உடன் தகவலை பெற்ற மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர்கள் அப் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் விரைந்து செயல்பட்டு யாழ் மாநகர சபைக்கு தெரிவித்தநிலையில் அங்கு வந்த யாழ் மாநகரசபையின் தண்ணீர் வாகனம் டீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது .பல இடங்களில் பரவலாக தீ வைத்ததால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது
குறித்தபகுதியில் உள்ள குப்பை மேடானது இதட்கு முன்னரும் பல தடவைகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கட்டது.
குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ள உத்தியோகத்தர்கள் எவரும் இத் தீ பரல்கள் தொடர்பாக எதுவித கவனமும் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . குறித்த குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் மக்களும் , கல்லுண்டாய் வீதியில் பயணம் செய்யும் மக்களும் இது தொடர்பான பிரச்சனைகளால் இன்னல்களை முகம் கொடுத்து வருகின்றனர்.
