மலேசிய தலை நகரம் கோலாலம்பூரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்.-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியளர்கள் உட்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியினுள் மீட்புபடையினர் ஈடுபட்டனர்.
எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இது வரை கேள்விக்குறியாக உள்ளது . இதனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை
மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கிடையே விமானம் காணாமல் போனது தோடர்பாக பல்வேறு வழக்குகள் பீஜிங் கோர்ட்டில் வருகிறது. இந்த நிலையில் மாயமான பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.3 1/2 கோடி இழப்பீடு வழங்க என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
