மறைந்த பால்கேரிய தீர்க்கதர்சி பாபாவாங்கவின் கணிப்புக்கள் பிறகு தற்போது மக்கள் நாஸ்ட்ரடாம்ஸின் கணிப்புக்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர் .அதன்படி அவரது கணிப்புக்களாக 2026 இல் நடக்கப்போகும் சில கணிப்புக்கள் வைரலாகி வருகிறது.
2026 ம் ஆண்டு பிறப்பதற்கு என்னும் சில நாட்களே இருப்பதால் ,மக்கள் வருகின்ற ஆண்டு என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில் உள்ளார்கள் அதன்படி,
தேனீக்கள் பெரும் கூட்டம்
நோஸ்ட்ரடாமஸின் கவிதை தொகுப்பின் மொழிபெயர்ப்பின் படி ” தேனீக்கள் பெரும் கூட்டம் எழும் ..இரவில் பதுங்கி இருந்து ..” என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் இதன் கருத்தாக .பண்டைய எகிப்திலும் நெப்போலியனின் ஏகாதிபத்ய சினத்திலும் காணப்படுவது போல் ,தேனீக்கள் சில நேரங்களில் ஒரு அரசியல் சின்னமாகவும் ,முடியாட்சி மற்றும் அரசாட்சியை குறிக்கும் என்றும் கூறப்படுகிறது .எனவே உலகளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம.
செவ்வாய் வானத்தை ஆளும் மற்றும் கிழக்கிலிருந்து மூன்று நெருப்புக்கள் எழும்.
செவ்வாய் போர் மோதல் மற்றும் நெருப்பின் கிரகம் என்று கூறப்படுகிறது ,எனவே இது”மனித ரத்தம் “என்று குறிப்பிடப்படுவதை போல மோதல்கள் துருத்திஸ்டவசமாக அடிவானத்தில் இருக்கக்கூடும் என்ற பிற கணிப்புக்களுடன் இணைக்கிறது இதற்கிடையில் ,’கிழக்கு பக்கங்களில் இருந்து மூன்று நெருப்புக்கள் எழும் ‘, என்பது கிழக்கிலிருந்து வரும் புதிய சக்திகளாக சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசிய போன்றவை வளர்ச்சி அடையும். மேலும் ‘மேற்கு அதன் ஒளியை இழப்பது ‘என்பது மேற்கத்திய உலகின் வெளிப்படையான வீழ்ச்சியை குறிக்கும் எனப்படுகிறது.
ஏழு மாதங்கள் பெரும் போர்
2026 ம் ஆண்டுக்கு பொருந்தும் மற்றொரு கருத்தாக ‘ஏழு மாதங்கள் பெரும் போர்,தீமையால் இறந்த மாக்கள் /ருவன் ,எவ்ரூக்ஸ் மன்னர் தோல்வியடைய மாடடார்.’ சில நிபுணர்கள் இதை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்,மற்றவர்கள் இதை மூன்றாம் உலக யுத்தம் என்கின்றனர்.
டிசினோவுக்கான எச்சரிக்கை
டிசினோ சுவிஸ்லாந்தின் தெற்கே உள்ள மாநிலமாகும் இதில் காடுகள்,ஏரிகள்,பனிப்பாறைகள் மற்றும் மலைகளும் உள்ளடக்கியது, இந்த கணிப்பின் படி இந்த மண்டலம் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை ,ஆனால் மிகவும் ஆபத்தான கணிப்பாகும்.
