ரஸ்யாவில் இரவு ஸ்பீகரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை பெண் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அவர் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பலமுறை அந்த வீட்டுக்காரரை எச்சரித்த போதும் அவர் எதனையும் பொருட்படுத்தாமல் அதிக ஒலியுடன் பாட்டுக்கேட்டுள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த பெண் மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த AK 47 ரக துப்பாக்கியினால் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டு ஜன்னல் நோக்கி சராமரியக்க சுட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா ? உட்பட சம்பவம் குறித்த எதுவித தகவலும் என்னும் வெளியாகவில்லை.
