சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.45kg,தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்துவரும் நிலையில் , டீர்வசம் போர்ட்டின் முன்னாள் தலைவர் , தங்க முலாம் பூசுவதற்காக பொறுப்பை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் பேத்தி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தங்க திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு கேரளா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடிகர் ஜெயராம் இடமும் புலனாய்வு துறையினர் விசாரணை நடாத்தியுள்ளனர் சபரிமலை துவார பாலகர் சிலையின் இருந்த கவசம் தங்க முலாம் பூசுவதற்கு சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதன்படி ச்ரண்ணெயில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் இவ் சம்பவம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
