களுத்துறை கெலிடோ பிரதேசத்தில் வீதியில் சுற்றி திரியும் விசர் நாய் ஒன்று குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துள்ளதாக களுத்துறை மாநகரசபை சுகாதார பிரிவு முறைப்பாடு செய்துள்ளது .இந்த சம்பவத்தால் குறித்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது விசர் நை கடிக்கு இலக்காகிய 11 பேரும் தற்போது களுத்துறை போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
